Ramaar Paalam
இராமர் பாலம் இராமேஸ்வரத்திற்கும், இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே உள்ள சுண்ணாம்பு கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளாகும். 30 கி .மீ நீளம் கொண்ட இந்த பாலம் மன்னார் வளைகுடாவையும், பாக்ஜலசந்தியையும் பிரிக்கிறது. இந்த பாலத்தில் கடலின் ஆழம் சுமார் 3 அடி முதல் 30 அடி வரையே உள்ளது. சில மேடுகள் கடல் மட்டத்திற்கு மேலும் உள்ளன. இராமாயணத்தில் இராமர் கடலைக் கடந்து இலங்கை சென்று இராவணனிடம் இருந்து சீதைஐ மீட்பதற்கு வானரங்கள் கட்டிய பாலம் பற்றிய குறிப்புகளை காணபடுகிறது. இந்த பாலம் அதுவாக இருக்கும் என்று பலர் நம்புகின்றனர். நாசா விண்வெளி நிறுவனம் எடுத்த புகைபடத்தில் காணப்படும் எந்த பாலம் இதற்கு சான்று என்கின்றர். சிலர் 3500 ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டது என்றும், சிலர் இயற்கையாகவே அமைந்தது என்றும் கூறுகின்றனர்.