Other Names of Madurai

மதுரை மாநகருக்கு வேறு சில பெயர்களும் உண்டு.

மதுரையம்பதி , கூடல்நகர் , கடம்பவனம் , திருவாலவாய் , நான்மாடகூடல், இவை மதுரையின் வேறு பெயர்கள்.

மதுரையில் மொத்தம் 1000 கோவில்கள் உள்ளதாக ஆய்வு ஒன்று சொல்கிறது. இதனால் மதுரைக்கு கோவில் நகரம் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

சிவபெருமான் தனது சடையிற் சூடிய பிறையில் கொண்டிருக்கும் அமிர்தமாகிய மதுவை தெளித்து, நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கி புனிதமாக்கிய தலமே "மது "ராபுரி என்ற பெயர் பெறக் காரணம் என்பர். மதுராபுரியே பின்னர் சுருங்கி மதுரை ஆகி விட்டது என்றும் சொல்லபடுகின்றது.

முற்காலத்தில் கடம்பமரம் நிறைந்து நின்ற கடம்ப காடாக இம்மதுரை காட்சி அளித்ததால் 'கடம்பவனம் ' என்ற பெயர் பெற்றது என்றும் கூறுவார்.


Comments

Popular posts from this blog

Boundaries of madurai

Welcome to the blog maduraikaraponnu

Why madurai is called as Athens of East?